தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 19, 2020, 12:27 PM IST

ETV Bharat / state

'ஜல்லிக்கட்டினை பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக நான் கூறவில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்று மையம் அமைக்கப்படும் என்பது தவறான தகவல் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து சி.டி. வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படமாட்டாது என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Minister Sengottaiyan
Minister Sengottaiyan

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 348 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இம்முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ' அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் 52 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 25 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாத நகராட்சியாக உருவாகும். கோபிசெட்டிபாளையம் நகர்பகுதியில் பத்து பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ' 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று மையத்தில் நடைபெறுவதாக நேற்றைய தினம் வதந்தி பரவியுள்ளது. அது முற்றிலும் பொய்யான தகவல்' எனத் தெரிவித்துள்ளார்.

'ஜல்லிக்கட்டினை பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக நான் கூறவில்லை’

மேலும், 'ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை. மாணவர்கள் தெரிந்துகொள்ள சி.டி மூலமாக வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகம் கனமாக உள்ளதாக புகார்கள் வருகிறது. பாடங்களை அதிகரித்துக்கொண்டே சென்றால் அதன் நிலை என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்' எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:அழிந்துவரும் கிராமியக் கலைகளை மீட்டெடுத்த ’சேலம் சங்கமம்’

ABOUT THE AUTHOR

...view details