தமிழ்நாடு

tamil nadu

அரசு பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

ஈரோடு அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பிற்கு சாலை விரிவாக்கப் பணிகள் மெத்தனமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

By

Published : Jan 6, 2023, 11:03 AM IST

Published : Jan 6, 2023, 11:03 AM IST

அரசு பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
அரசு பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

அரசு பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்து வந்தார். தனது இருசக்கர வாகனத்தில் கோபியிலிருத்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கள்ளிப்பட்டி அருகே அவர் சென்றார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற அரசு பேருந்தினை முந்திச்செல்ல அவர் முயன்றதாக தெரிகிறது.

அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலை விரிவாக்கப் பணிகள் முடிவு பெறாத நிலையில் உள்ளது. ஜல்லி மற்றும் சிறு கற்களில் இருசக்கர சக்கரம் சிக்கியதால் நவீன் நிலை தடுமாறி நேற்று (ஜன.5) தவறி சாலையில் விழுந்தார்.

அப்போது அரசு பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி நவின் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது - ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details