திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஆடலூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசித்துவந்த மாலதி(32), கணவரைப் பிரிந்து 5 வருடங்களாக தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆடலூரிலிருந்து அருகிலுள்ள கேசி பட்டி கிராமத்திற்கு குடிபெயர்ந்த அவர், அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவரைக் காதலித்துள்ளார்.
இதையடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த அவருக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், சதீஷுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இதையறிந்த மாலதி சதீஷ் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.