திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவருடன் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
‘சொந்த நலனுக்காகவே திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி! - தமிழ்நாடு முதலமைச்சர்
திண்டுக்கல்: குடும்ப அரசியல் மற்றும் சொந்த நலனுக்காகவே திமுக ஆட்சிக்கு வர நினைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

edappadipalanisamy
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “மத்தியில் நிலையான ஆட்சி அமைய திறமையான பிரதமர் வரவேண்டும். அதற்கு நமது பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்திலிருந்த திமுக தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது. திமுக எப்போதுமே தனது சொந்த நலனுக்காகவே ஆட்சிக்கு வர நினைக்கிறது. அவர்களது நலனுக்காக மட்டுமே திமுக பாடுபடும். மக்கள் நலனுக்காக இல்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பரப்புரை