தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2020, 11:32 AM IST

Updated : Feb 7, 2020, 8:36 PM IST

ETV Bharat / state

‘கொடைக்கானலில் போதை பார்ட்டி‘ - 250 பேரை கொத்தாகத் தூக்கிய போலீஸ்

திண்டுக்க‌ல்: கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arrested
arrested

திண்டுக்க‌ல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிற‌ப்பு போதைத் த‌டுப்புப் பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌த் த‌க‌வ‌ல் கிடைத்த‌து.

கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய 250பேர் கைது

தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு இரவு விருந்தில் ஈடுபட்டிருந்த 250க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த மது பாட்டில்கள், போதைப்பொருள்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். அதன்பின் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இர‌வு நேர விருந்து நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க : பட்டப்பகலில் கொள்ளை - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Last Updated : Feb 7, 2020, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details