மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கருணை இல்லத்தில், 31 பயனாளிகளுக்கு 2.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்குதல் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 860 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.