தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2021, 10:49 AM IST

ETV Bharat / state

குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

தர்மபுரி: ஆட்டுக்காரன் பட்டி அருகே குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

two-girls-drowned-in-the-pond-of-death
two-girls-drowned-in-the-pond-of-death

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு இனியா (10), சிவானி (7) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (பிப்.06) வீட்டிற்கு அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமிகள் இருவரும் மீன் பிடிக்கும்போது குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் குட்டையில் மூழ்கிய சிறுமிகள் இருவரையும் மீட்டனர்.

இதையடுத்து நகர காவல் துறையினர் உடல்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குட்டையில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details