தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு இனியா (10), சிவானி (7) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (பிப்.06) வீட்டிற்கு அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமிகள் இருவரும் மீன் பிடிக்கும்போது குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் குட்டையில் மூழ்கிய சிறுமிகள் இருவரையும் மீட்டனர்.