தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2020, 7:36 PM IST

ETV Bharat / state

உடும்பு கறி விற்பனை: ஒருவர் கைது

தருமபுரி: உடும்பு கறி விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Monitor lizards
Monitor lizards Curry

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி, ரங்கம்பட்டி, காப்புக்காடு, பகுதியில் உடும்புகள் வேட்டையாடப்படுவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர் இரண்டரை கிலோ எடையுள்ள உடும்பை பிடித்து அதை வெட்டி விற்பனைக்காக வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில் வட்டகாணப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலன் என தெரியவந்தது. வனத்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை - தந்தை கைது

ABOUT THE AUTHOR

...view details