தருமபுரி: நகரப்பகுதி ராமக்கா ஏரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், அவர் செங்கல் வியாபாரி என்றும் தெரியவந்துள்ளது.
அவரது மனைவி வள்ளியம்மாள் இருவரும் திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பும்போது, ராமகால்ஏரி மதிகோண்பளையம் பிரிவு சாலையில் லாரி மோதி தூக்கி வீசப்பட்டதில் லாரியின் சக்கரம் தலையின் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.