தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓகேனக்கல்: தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை!

தருமபுரி: கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் ஒகேனக்கல் பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

By

Published : Sep 21, 2020, 10:20 AM IST

Flood danger warning
Flood danger warning

கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் 60 ஆயிரம் கன அடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எச்சரிக்கை பென்னாகரம் வட்டாட்சியர் சேதுலிங்கம் தலைமையில் விடப்பட்டது.

இதையும் படிங்க:கனமழை காரணமாக ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details