தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2021, 10:51 AM IST

ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை: இருவரும் உயிரிழப்பு!

தர்மபுரி: அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகள், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தை ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை: இருவரும் உயிரிழப்பு!
கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை: இருவரும் உயிரிழப்பு!

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று(மே.20) காலை தனது மகள் சாய்பிரநித்தாவை (4) அழைத்துக் கொண்டு இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதைக்கண்ட முருகேசன் சத்தமிட்டு மகளை காப்பாற்ற வேண்டும் என்று கிணற்றில் குதித்துள்ளார். தொடா்ந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின் வந்து பார்த்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் இருவரும் வராதாதால், அரூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி தேடினர். முதலில் குழந்தையின் உடலை கண்டறிந்து மீட்டனர். தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு முருகேசன் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இதையடுத்து இருவரது உடலையும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, மகள் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details