தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2020, 9:49 AM IST

ETV Bharat / state

தருமபுரியில் புதிதாக 136 பேருக்கு கரோனா

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

136 new corona cases in dharmapuri
தருமபுரி கரோனா நிலவரம்

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் 136 என அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் செப். 20 ஆம் தேதி உயிரிழந்தார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றிவரும் 2 மருத்துவர்கள், 12 வயது குழந்தை, சுகாதார ஆய்வாளர், வங்கிப் பணியாளர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட 136 புதிய நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 89 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயரத்து 793 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடிசை மாற்றும் வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள்: தருமபுரியில் அன்பழகன் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details