தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் பொதுப்பணித் துறை பொறியாளர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கும்பகோணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.27 லட்சம் மதிப்பிலான 37 கிலோ எடைக் கொண்ட வெள்ளி பொருள்கள் சிக்கின.