தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் போலீஸ் தற்கொலை!

கடலூர்: திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் பட்டாலியன் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Oct 4, 2019, 1:40 PM IST

தற்கொலை செய்து கொண்ட இரண்டாம் நிலை காவலர் ராஜேஷ்குமார்

கடலூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (27). இவர் உளுந்தூர்பேட்டை 10ஆவது பட்டாலியனில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நான்கு நாள் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்ற இவர் இன்று காலை பூச்சி மருந்து குடித்த நிலையில் அவரது வீட்டு மாடியில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக புதுச்சத்திரம் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல் துறையினர்உடற்கூராய்வுக்காகஅவரது உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவருடைய ஜாதகத்தில் தோஷம் இருந்ததாகவும் இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details