தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை தேவை - ஜி.கே.மணி

கடலூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து வரும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : Jun 12, 2019, 12:17 PM IST

ஜி. கே மணி

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள குறவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் பிரேம்குமார் (20) முகநூல் மூலம் ஆபாச கருத்துகளை ராதிகாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர்களை சந்திக்கும் ஜி.கே மணி

இதைப்பார்த்து அத்திரமடைந்த ராதிகா அந்த இளைஞரை திட்டி மறுபதிவு செய்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த பிரேம்குமாரின் உறவினர்கள், ராதிகா வீட்டிற்கு வந்து பிரச்னை செய்ததுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி ராதிகா அன்றைய தினமே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ராதிகாவின் மாமன் மகனும், காதலனுமான விக்னேஷ், மாணவி இறந்த துக்கம் தாங்கமால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் பிரேம்குமார் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் முன் சரணடைந்தார். இதனிடையே பாமக தலைவர் ஜிகே மணி உயிரிழந்த ராதிகாவிற்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளகளிடம் பேசுகையில், ’கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோல் ஒரு கும்பல் பெண்களை இழிவுபடுத்தியும், ஒருதலைக் காதலால் கொலை செய்தும் வருகின்றனர். இவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details