தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2019, 5:21 PM IST

ETV Bharat / state

இன்று முதல் மீன்பிடி தடை காலம் தொடக்கம்

கடலூர்: கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்குவதற்கும் கடல் வளங்கள் அழியாமல் பாதுகாப்பதற்காகவும் தமிழக அரசின் சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடை காலம்

கடலூரில் மட்டும் சுமார் 63 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் பைபர் படகு, 600 விசைப்படகு, 300 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று முதல் மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியை தவிர்த்துவிட்டு தங்களுடைய படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களுடைய வலைகள் மற்றும் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுங்கிலும் உள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலம்

கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மேற்காணும் 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும், கடலில் மீன் இனவிருத்திக்கு ஏற்ற காலமான 61 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details