கடலூர்: விருதாச்சலம் அடுத்த கார்மங்குடி ஊராட்சியிலிருந்து, மருங்கூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம்செய்யப்படுகிறது.
அப்பகுதியில் விவசாயம் செய்துவரும் பொதுமக்கள், மின்மோட்டார் மூலம் பாசனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது மருங்கூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடிக்கான நடவு நடும் பணியில் உழவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் மருங்கூரில் மின்மாற்றி (Transformer) ஐந்து முறைக்கு மேலாக பழுதடைந்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் உழவர்களில் விளைநிலம் சரியான நீர்ப்பாசனமின்றி காய்ந்து இழப்பு ஏற்பட்டுள்ளது.