தமிழ்நாடு

tamil nadu

கரோனா வைரஸ்: கடலூரில் ஐந்து பேர் அட்மிட், 2 பேர் டிஸ்சார்ஜ்

By

Published : May 25, 2020, 6:27 PM IST

கடலூர்: கரோனா வைரசால் மேலும் ஐந்து பேர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

corona update in cuddalore district
corona update in cuddalore district

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்தபடியாக கடலூர் கரோனா வைரசால் அதிகளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

நேற்றுவரை கடலூர் மாவட்டத்தில் 427 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கடலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் சிதம்பரம் விருத்தாசலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 415 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் இரண்டு பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: நிமோனியாவால் உயிரிழந்த மூதாட்டிக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details