தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2019, 10:04 AM IST

ETV Bharat / state

என்எல்சி பாய்லரில் தவறி விழுந்து ஒப்பந்தத் தொழிலாளர் உயிரிழப்பு!

கடலூர் : என்எல்சியில் உள்ள பாய்லரில் தவறி விழுந்த ஒப்பந்தத் தொழிலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Contract worker casualties
ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் செல்வகுமார் (24). இவர் என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக கடந்த 6 மாதமாக பணி புரிந்து வருகிறார். திருமணம் ஆகாத இவர் நேற்று வழக்கம் போல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் பிரிவில் பணிபுரிந்த போது, எதிர்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தார்.

மருத்துவமனையை முற்றுகையிடும் பொதுமக்கள்

இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செல்வகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மருத்துவமனையை முற்றுகையிடும் கிராம மக்கள்

தகவல் அறிந்து வந்த செல்வக்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:கைகழுவ சென்ற மாணவர் மீது கிரிக்கெட் மட்டை விழுந்து உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details