கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் செல்வகுமார் (24). இவர் என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக கடந்த 6 மாதமாக பணி புரிந்து வருகிறார். திருமணம் ஆகாத இவர் நேற்று வழக்கம் போல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் பிரிவில் பணிபுரிந்த போது, எதிர்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தார்.
இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செல்வகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.