தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2020, 3:07 PM IST

ETV Bharat / state

மீட்புப் பணிக்கு கூடுதலாக ஒரு அமைச்சர் நியமனம்

சென்னை: புரெவி புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர் சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் நியமனம் செய்துள்ளார்.

Puravi cyclone
Minister CV Shanmugam

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சராக சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் நியமனம் செய்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரெவி புயலின் தாக்கத்தால் கடந்த 3.12.2020 முதல் 5.12.2020 வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் தங்கமணி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கன மழையின் காரணமாக அதிக பாதிப்பு இருப்பதால் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் சி.வி சண்முகம் இரு அமைச்சர்களுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வார்" என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details