தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 7:50 AM IST

ETV Bharat / state

கோவை அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது

கோவை: கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கைதான சிவகுமார்

அப்போது, சோமனூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தலில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அதன்பின், காவல் நிலையம் கொண்டுச் சென்று விசாரித்ததில், அவர் சோமனூர் ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பதும் இவர் கஞ்சா வியாபாரி என்பவதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details