தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2019, 7:39 PM IST

Updated : Dec 23, 2019, 8:02 PM IST

ETV Bharat / state

'பொள்ளாச்சியில் தேர்தல் விதி மீறிய அதிமுக வேட்பாளர்'

கோவை: பொள்ளாச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர் விதிமீறி செயல்படுவதாக பெண் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாட்சியில் தேர்தல் விதிமீறிய அதிமுக வேட்பாளர்
பொள்ளாட்சியில் தேர்தல் விதிமீறிய அதிமுக வேட்பாளர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் கள்ளிப்பட்டி கிராமத்தில் மட்டும் 850 வாக்குகள் உள்ளன. இங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்காக அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


அதிமுகவைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் பரப்புரைக்காக வீடுகளின் கதவுகள், தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ சின்னம் பதிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். இந்த ஸ்டிக்கரானது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒட்டி உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாட்சியில் தேர்தல் விதிமீறிய அதிமுக வேட்பாளர்

இதுகுறித்து அவர் கூறும்போது, "அதிமுக வேட்பாளர் திருவேங்கடம் தேர்தல் விதிமீறி செயல்படுவதாக நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற தேர்தலில் விதிமுறை மீறும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், "உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு கறி விருந்து கொடுத்து வருகிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு - எஸ்.பி தகவல்

Last Updated : Dec 23, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details