தமிழ்நாடு

tamil nadu

குளத்திலிருந்து பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

By

Published : Nov 24, 2020, 7:26 PM IST

கோயம்புத்தூர் : உக்கடம் அருகே ஸ்மார்ட் சிட்டி வேலை நடக்கும் வாலாங்குளத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் பெண் சடலம் மீட்பு
குளத்தில் பெண் சடலம் மீட்பு

கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.24) வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அந்நபர் இறந்து இரண்டு நாள்களுக்கு மேலாகியிருக்கக் கூடும் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குறிச்சியில் குளத்தில் மிதந்த பெண் உடல் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details