தமிழ்நாடு

tamil nadu

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய மரநாய்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு!

பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூர் தனியார் தோட்டத்தில் எலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய மரநாயை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

By

Published : Feb 9, 2023, 10:04 AM IST

Published : Feb 9, 2023, 10:04 AM IST

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய மரநாய்
எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய மரநாய்

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய மரநாய்

கோவை: பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூர் அருகே தனியார் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் எலி மற்றும் பெருக்கான்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் தோட்டத்து உரிமையாளர் அவற்றைப் பிடிக்க கூண்டு ஒன்றை வைத்துள்ளார்.

கூண்டிற்குள் தேங்காய் துண்டு ஒன்று வைத்து தென்னந்தோப்பில் தொல்லை கொடுக்கும் எலி அல்லது பெருக்கான் கூண்டுக்குள் சிக்கும் விதமாக கூண்டை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உணவு தேடி வந்த மரநாய் ஒன்று எதிர்பாராத விதமாக அந்த கூண்டிற்குள் தேங்காய்க்கு ஆசைப்பட்டு சிக்கியது.

காலையில் தோட்டத்து உரிமையாளர் வந்து கூண்டை பார்த்தபோது அதில் ஒரு மரநாய் இருந்துள்ளது. இது குறித்து தனியார் தோட்டத்து உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் அகப்பட்ட மரநாயை பத்திரமாக மீட்டு ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர்.

இதையும் படிங்க: வால்பாறையில் அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details