தமிழ்நாடு

tamil nadu

கல்குவாரி மாஃபியாக்களால் அழியும் விவசாயம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை எப்போது?

By

Published : Feb 26, 2023, 3:53 PM IST

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு கல்குவாரி மாஃபியாக்களால் விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

Etv Bharat கல்குவாரி மாஃபியாக்களால் அழியும் விவசாயம்
Etv Bharat கல்குவாரி மாஃபியாக்களால் அழியும் விவசாயம்

கல்குவாரி மாஃபியாக்களால் அழியும் விவசாயம்

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு தாலுக்கா உள்ளிட்ட பல்வேறு தாலுக்காக்கள் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தென்னை, தக்காளி, வாழை மற்றும் பல்வேறு வகையான காய்கறிகள், வெற்றிலை உட்பட்டவை விவசாயம் செய்யப்படுகிறது. இவை கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் குறைவாக கற்கள், உளிகள் மூலம் கற்களை வெட்டி எடுத்து சாலைகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது பத்தாம் நம்பர், முத்தூர், சொக்கனூர், பொட்டையாண்டிபுரம், வடபுதூர், கண்ணம்மநாயக்கனூர், பெரும் பதி, காளியாபுரம், களத்தூர், நல்லையன் குட்டை என்று கிணத்துக்கடவைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகிறது. கல்குவாரிகளில் இயந்திரங்கள், வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மீது தூசிகள் படித்தும், அருகில் இருக்கும் வீடுகளில் விரிசல்களும் ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “கல்குவாரியில் இருந்து எடுக்கும் பாறைகள் அருகில் இருக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் குவாரிகள் அனுமதி பெற்று கேரளாவிலுள்ள உள்ள கல்குவாரி மாஃபியாக்கள் மூலம் கற்கள் கடத்தப்படுகிறது. கிணத்துக்கடவு பகுதி பாலக்காட்டு கணவாய் ஒட்டியுள்ளதால் தென்மேற்கு பருவமழை பெய்யும் விவசாய பூமியாக திகழ்கிறது.

தொடர்ந்து கல்குவாரிகள் மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இங்கிருக்கும் விவசாயிகள் கிணத்துக்கிடவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முத்துமலை ஆண்டவர் கோயில் அருகே கல்குவாரி வருவதை தடுக்க சென்னை பசுமை தீர்ப்புயாத்தில் வழக்கு தொடரப்பட்டு உரிய ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெறபட்டுள்ளது.

இதேபோல் புரவிபாளையம் ஊராட்சியில் 2018ஆம் ஆண்டு கல்குவாரி இயக்கமால் இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பி.ஏ.பி.பாசன வசதி இல்லாததால் பருவமழைய நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். புரவிபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான என்சஸ் கல்குவாரி மீது சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அனுமதியின்றி கல் குவாரிகளில் வெடிவைத்து கற்கள் எடுத்ததால் 32 கோடி ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் கல்குவாரிகள் விவசாய நிலங்களில் செயல்படாமல் இருக்க நடவடிக்கை வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் மூலம் குழு அமைத்து இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தற்போது கிணத்துக்கடவில் உள்ள கனிம வள பாதுகாப்பு குழுவினர் மற்றும் விவசாயிகள் கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நம்பர் 10 முத்தூரில் தமிழ்நாடு அரசும் மற்றும் தனியாரும் சேர்ந்து நடத்தும் கல்குவாரியில் தற்போது 40 ஏக்கர் கற்கள் அளவுக்கு அதிகமாக அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கல்குவாரிகளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 10 வண்டி லாரிகள் செல்கிறது” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கேளிக்கை பூங்காக்களுக்கு மத்தியில் 'வாசிப்பு பூங்கா' - சத்தமின்றி சாதித்த மதுரை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details