கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 158 கி.மீ., தூரம் பயணிக்கும் நொய்யல் ஆறு தூர்வாரும் பணியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். ரூ. 230 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டமானது 24 மாதத்திற்குள் செயல்படுத்தப்படவுள்ளது.