தமிழ்நாடு

tamil nadu

"ராகுல் காந்தி ராவணன் தான்" - ஏ.பி.முருகானந்தம் பகிரங்க குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 11:07 PM IST

பிரதமர் மோடி அறிமுகம் செய்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து, பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்க கூட்டமைப்பின் தலைவரான பாபுஜி சுவாமிகளை அவரது பீடத்தில் சந்தித்தார்.

ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாபுஜி சுவாமிகளை செய்தியாளர்கள் சந்திப்பு
ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாபுஜி சுவாமிகளை செய்தியாளர்கள் சந்திப்பு

ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாபுஜி சுவாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்:விஸ்வகர்மா சமூதாய மக்கள் பயன்பெறும் வகையில் 'விஸ்வகர்மா யோஜனா' என்னும் திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அமல்படுத்தப்படும் என சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இத்திட்டம் விஸ்வகர்மா சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்க கூட்டமைப்பின் தலைவரான பாபுஜி சுவாமிகளை, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அவரது மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் இன்று (அக்.06) சந்தித்தார்.

பின்னர், ஏ.பி.முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “தேசிய தலைமை இது குறித்து முடிவு செய்யும். நாங்கள் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாட்டில், ஆட்சி செய்யும் திமுக, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை. அதனை திசை திருப்புவதற்காக சனாதனம் போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து, “வரும் நாடாளுமன்ற தேர்தலில், மாநில தலைவர் அண்ணாமலை அல்லது அவர் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். தற்போது தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதே அனைவரின் நோக்கம். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை அன்றே விமர்சித்தோம். ராகுல் காந்தி ராவணன் தான்” என குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் வலது கையில் அடிபட்டதற்கு இடது கையில் கே.பி.முருகானந்தம் பேண்டேஜ் ஒட்டிய வீடியோ வைரலானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நடைப்பயணத்தின் போது கூட்டத்தில் மோதிரம் பட்டும், வளையல் பட்டும், கை நகங்கள் பட்டும் அவரது கை முழுவதும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக அந்த விரலில் அதிக காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் தான் இடது கையில் பேண்டேஜ் போட்டார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையா? - எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details