மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதன் சிறப்புகள் மற்றும் நன்மைகளை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துக் கூறும் வகையில் கோயம்புத்தூரில் தெற்கு தொகுதி பாஜகவினர் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். செட்டிப்பாளையத்திலிருந்து க.க.சாவடி வரை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் வேளாண் சட்டத்தின் நன்மைகளை கூறும் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.