தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2020, 7:51 PM IST

ETV Bharat / state

கோவையில் மேலும் 395 பேருக்கு கரோனா

கோவை : இன்று (ஆக. 21) 395 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்குகிறது.

Corona update
Corona update

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று 395 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 957ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 258 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 660ஆக அதிகரித்துள்ளது. மூன்றாயிரத்து 66 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க :சென்னை கரோனா பாதிப்பு விவரங்கள்

ABOUT THE AUTHOR

...view details