தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2023, 2:32 PM IST

ETV Bharat / state

வால்பாறையில் அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி!

வால்பாறையில் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தலைமறைவாகிய அரசு பேருந்து ஓட்டுனரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

கோவை:சரவணம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தசாமி(25). இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் UD பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சந்தோஷ் என்ற மற்றொரு இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, வால்பாறையில் இருந்து உருளிக்களுக்கு சென்றபோது சேஷக்கல் முடியிலிருந்து பொள்ளாச்சியை நோக்கி அரசு பேருந்தை ஓட்டுநர் ஜெயக்கொடி ஓட்டி வந்துள்ளார். உருளிக்கல் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது திடீரென பேருந்து அவ்வழியாக இவ்விருவரும் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பேருந்திலிருந்து இறங்கி ஓடி தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து அங்கிருந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது.

பயணத்தில் கவனம் தேவை: வெளியே செல்லும் போது உயிரைக் காக்கும் தலைக்கவசத்தை யாரும் மறந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் மிதமான வேகத்தில் செல்வதே நம்மை இதுபோன்ற விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளிலிருந்து தப்பிக்கலாம். குறிப்பாக, மலைப்பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள், கொண்டை ஊசி வளைவுகளில் அவசரமில்லாமல் மெதுவாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை மனதில் நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: Turkey Earthquake: பூகம்பத்தில் பூத்த பூ.. நிலநடுக்கத்தில் பிறந்த அதிசய குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details