தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2022, 8:53 AM IST

ETV Bharat / state

குரோம்பேட்டையில் இளைஞர் தற்கொலை

குரோம்பேட்டையில் இளைஞர் தற்கொலையால் உயிரிழந்தார்.

குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் தற்கொலை
குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் தற்கொலை

சென்னை: குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போலீசார் தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இளைஞர் தற்கொலை

தாம்பரம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அந்த இளைஞரின் தலை துண்டித்து தனியே கிடந்தது. இளைஞர் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் குரோம்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தார். பெயர் அகிலன் (25) என்பது தெரியவந்தது.

இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அகிலன் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

இதையும் படிங்க: சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க காவலர்களுக்கு பாடி வோர்ன் கேமரா!

ABOUT THE AUTHOR

...view details