சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதி ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர், ஜெகன்குமார் (40). இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பைரவி(34). பைரவி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜுன்.9) பைரவி வீட்டு முன்பு, மின்மோட்டார் அருகில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கை மின்மோட்டார் வயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த பைரவியின் குடும்பத்தினர், அவரை மீட்டு அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.