தமிழ்நாடு

tamil nadu

வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்று வந்த பெண் கைது

தாம்பரம் பகுதியில் மாதக்கணக்கில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Mar 14, 2021, 7:00 AM IST

Published : Mar 14, 2021, 7:00 AM IST

தாம்பரம் பகுதியில் பல மாதங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் சக்திபிரியா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம் பகுதியில் பல மாதங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் சக்திபிரியா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை : தாம்பரம் கடப்பேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அடையார் மதுவிலக்கு காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப் பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது தாம்பரம் கடப்பேரி தெற்கு குளக்கரை தெருவைச் சேர்ந்த சக்திபிரியா (30) என்பவர் வீட்டிலேயே கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து சக்திபிரியாவின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய காவல் துறையினர், அவர் வீட்டின் உள்ளே குழி தோண்டி புதைத்து வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதன்பின்னர் சக்திபிரியாவை கைது செய்த மதுவிலக்கு காவல் துறையினர், அவரை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சக்திபிரியா மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :காலில் விழுந்து வாக்கு சேகரித்த செந்தில்பாலாஜி, ஜோதிமணி

ABOUT THE AUTHOR

...view details