தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Sep 19, 2020, 3:19 PM IST

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

  • குதிரை வண்டி பயணம்! தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவின்போது பாஜக அலுவலகத்துக்கு அனுமதி இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறாக குதிரை வண்டியில் வந்ததாக பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • ’சலாம் சென்னை' குறும்படம் வெளியீடு!

சென்னை: கரோனா காலகட்டத்தில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'சலாம் சென்னை' என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.

  • ஆன்லைன் கேம் விளையாடி 90,000 ரூபாய் காலி செய்த சிறுவன் - பெற்றோர் வழங்கிய நூதன தண்டனை!

ராமநாதபுரம் : சாயல்குடி அருகே ’ஃபிரீ ஃபயர்’ என்னும் ஆன்லைன் கேம் விளையாடி, பெற்றோர் வங்கிக் கணக்கிலிருந்த 90 ஆயிரம் ரூபாயை காலி செய்த சிறுவனுக்கு, அவனது பெற்றோர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

  • கரோனா காலத்தில் கூடுதலாக 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க மக்களவை ஒப்புதல்!

டெல்லி : கரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கூடுதலாக சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • ரசிகர்களுக்கு புதிய அப்டேட் கொடுக்கவுள்ள தீபிகா!

மும்பை : தீபிகா படுகோன் தனது ரசிகர்களிடம் இன்னும் மூன்று நாட்களில் புதிய சுவாரஸ்யமான அப்டேட் ஒன்றைத் தெரிவிக்க உள்ளார்.

  • பாலிவுட் பாட்ஷாவை பின்னுக்குத் தள்ளிய 'மாஸ்டர்' விஜய்!

சென்னை : நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்படிப்பின் போது விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.

  • கல்லூரி மாணவியின் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தருமபுரி: செல்போனைத் திருடி விட்டதாகக் கூறி கல்லூரி மாணவியின் உறவினர் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

  • 'முந்தானை முடிச்சு' படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை : நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகி, மெகா ஹிட் அடித்த 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் ரீமேக் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

  • ’ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ராமன்-லட்சுமணன் போன்றவர்கள்' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை : ராமன்-லட்சுமணன் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் புரிதலுடன் ஒற்றுமையாக உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • மேற்கு வங்கம், கேரளாவில் அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்த 9 நபர்கள் கைது!

டெல்லி : மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களிலிருந்து அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்த ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details