தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுமான அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது!

சென்னை: ஆவடியில் கட்டுமான நிறுவனம் நடத்திவருபவருக்கு கொலைமிரட்டல் விடுத்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை

By

Published : Apr 2, 2019, 3:06 PM IST

சென்னை ஆவடியில் பாலாஜி நகர் திருவாசகம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நரசிம்மன்(45). இவர் கட்டுமான நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில்,2015ஆம் ஆண்டு அவர் திருமுல்லைவாயல் மணிகண்டபுரத்தில் 20 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடித்துவிட்டு விற்பனை செய்யஇருந்தார். அப்போது ஆவடி அடுத்த அயப்பாக்கம், ஐயப்பன் நகரைச்சேர்ந்த அழகேசன்(49), அவரது தம்பி கார்த்திகேயன்(44) ஆகியோர் லக்ஷ்மி நாராயணனை அணுகியுள்ளனர்.

பின்னர் அவரிடம் இவர்கள் இருவரும் சேர்ந்து 10 வீடுகளை விற்பனை செய்துத் தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதில் இருவரும் முதலில்மூன்று வீடுகளை விற்று லக்ஷ்மி நாராயணிடம்பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால்,மீதியுள்ள ஏழு வீடுகளை விற்பனை செய்துவிட்டு, அதற்குரிய 1.55 கோடி ரூபாய் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், லக்ஷ்மி நாராயணன் வேலை விஷயமாக அம்பத்தூர் சென்று விட்டு காரில் அயப்பாக்கம் வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, அழகேசன், கார்த்திகேயன் ஆகியோர் வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி, நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை திரும்ப வாங்கிவிட வேண்டும் எனவும்,இல்லையென்றால்கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து லட்சுமி நாராயணன் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அழகேசன், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்தனர்.

கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது


ABOUT THE AUTHOR

...view details