தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருண் ஜேட்லியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை : அருண் ஜேட்லி இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

opaneerselvam-condolence

By

Published : Aug 24, 2019, 6:38 PM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”பாஜகவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

அருண் ஜேட்லியின் மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details