சென்னை: சென்னையில் 24,29 மற்றும் 35 வயதுடைய மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஜனவரி 15, 2022 மற்றும் ஜனவரி 19, 2022 ஆகிய தேதிகளில் ஒரு வார காலத்திற்குள் கழிவுநீர் தொட்டிகளில் இறந்தனர்.
அவர்கள் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய கையால் துப்புரவு பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவர்களின் குடும்பத்தினர், “கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் சாக்கடைளில் மூலம் கொலைகளை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து நபர்களையும் அடையாளம் காண அதிகாரப்பூர்வ மறு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்வி உதவித்தொகை, வீட்டு வசதி, ஓய்வூதியம், சுகாதார நலன்கள் மற்றும் கண்ணியமான வேலைகள் ஆகியவற்றுடன் கையால் கழிவுகள் துப்புரவு செய்யும் நபர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க சட்டத்தின் விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். இந்த மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும்” என்றனர்.