தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2022, 9:23 AM IST

ETV Bharat / state

தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாம்பரம் அருகே ஏரியில் தோழிகளுடன் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி
தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி

சென்னை:தாம்பரம் அடுத்த முடிச்சூர் லஷ்மி நகர் பகுதியில் வசித்துவருபவர் பெரியசாமி (42). இவர் தேநீர் வியாபாரம் செய்துவருகின்றார். இவரது மகள் வினோதினி (13) மணிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்தார். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள முடிச்சூர் ஏரியில் சக தோழிகளுடன் வினோதினி குளிக்கச் சென்றார்.

ஏரியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

ஏரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது வினோதினி நீரில் மூழ்கி வெகு நேரம் ஆகியும் வெளியே வராதால் உடனே இது குறித்து வினோதினியின் பெற்றோரிடம் அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.

உடனே அந்த ஊர் மக்களால் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய சிறுமியை இறந்த நிலையில் மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கன்கரனை காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வினோதினி இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் காவல் துறையினரிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகர் சரத்குமாருக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details