தமிழ்நாடு

tamil nadu

'தலைநகரம் 2' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

வி.ச. துரை இயக்கத்தில், சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் இதே கூட்டணியில் உருவாகும் தலைநகரம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

By

Published : Sep 24, 2021, 7:30 AM IST

Published : Sep 24, 2021, 7:30 AM IST

படகுழுவினருடன் சுந்தர் சி
படகுழுவினருடன் சுந்தர் சி

சென்னை: சுந்தர் சி - இயக்குநர் வி.ச. துரை கூட்டணியில் உருவான திகில் திரைப்படமான 'இருட்டு' வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் மீண்டும் இதே கூட்டணியில் 'தலைநகரம் 2' திரைப்படம் உருவாகிவருகின்றது.

இதனை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, வி.ச. துரை, எஸ்.எம். பிரபாகரன் ஆகிய இருவரும் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

படக்குழுவினருடன் சுந்தர் சி

வி.ச. துரை முதல் முறையாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, மணிஜி வசனத்தை கவனிக்கிறார்.

இந்நிலையில் மாநகரம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (செப். 23) இனிதே தொடங்கியது. படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் களமிறங்கும் பானுப்பிரியாவின் தங்கை

ABOUT THE AUTHOR

...view details