தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு IOT (Internet of Things) துறையிலும் வளர்ச்சி அடைய வேண்டும்' - ஆளுநர் ஆர்.என்.ரவி

மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழ்நாடு முன்னோக்கி இருக்கிறதோ அதே போல IOT (Internet of Things) துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

By

Published : Oct 10, 2022, 6:30 PM IST

Updated : Oct 11, 2022, 7:10 AM IST

தமிழ்நாடு IOT (Internet of Things) துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும்
தமிழ்நாடு IOT (Internet of Things) துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும்

சென்னை:கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவப் பிரிவு துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் ஆளுநர் ரவி பேசியது, “புதிய கண்டுபிடிப்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளை புரிந்து கொண்டு அதனை ஏற்றுகொள்ள வேண்டும் எனக் கூறிய அவர் தமிழ்நாடு மருத்துவ துறையில் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளது.

இதுபோன்ற புதிய துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக அமைய வேண்டும், மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழகம் முன்னோக்கி இருக்கிறதோ அதே போல IOT (Internet of Things) துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் 2047ஆம் ஆண்டு இந்தியா தன்னுடைய 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர் தற்போது வரை நாம் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப கருவிகளை வாங்கி வந்தோம்.

ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் சிப் மற்றும் semi conductor எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்தோம், வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தால் அது எதற்கும் உதவாது என்பதற்காகவே தற்போது 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அதனை இங்கேயே உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த தன்னார்வலர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில்மகேஷ்

Last Updated : Oct 11, 2022, 7:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details