தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Case against director Shankar: எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 11:02 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், "ஜூகிபா" என்ற தலைப்பில் தான் எழுதிய நாவலை இயக்குநர் ஷங்கர் திருடியுள்ளதாக, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவான குற்ற வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், 'எந்திரன்' படத்தின் கதைக்காக இயக்குநர் ஷங்கரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது.

இதன் அடிப்படையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஷங்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி ஆரூர் தமிழ்நாடனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details