சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இறுதி ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்செய்யப்படவிருப்பதால் இறுதி ஆலோசனை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.
பள்ளிக் கல்வி ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா உள்ளிட்ட பல அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.