சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " விதர்பா முதல் தென் தமிழ்நாடு வரை, 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
இன்று(மே.13) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் , தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 14 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி,கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறை காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
மே 15 : தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். இதனால் , தமிழ்நாட்டிற்கு அன்று 'ரெட் அலர்ட்'அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 16, மே 17 ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.