தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2021, 2:59 PM IST

Updated : May 13, 2021, 3:12 PM IST

ETV Bharat / state

அடுத்த 4 நாள்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த 4 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

red alert
ரெட் அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " விதர்பா முதல் தென் தமிழ்நாடு வரை, 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
இன்று(மே.13) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் , தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 14 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி,கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறை காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

மே 15 : தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். இதனால் , தமிழ்நாட்டிற்கு அன்று 'ரெட் அலர்ட்'அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 16, மே 17 ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேர மழை அளவு (சென்டிமீட்டரில்):


அரூர் (கிருஷ்ணகிரி) 5 செ.மீ, சித்தார் (கன்னியாகுமாரி) 4 செ.மீ, உத்தமபாளையம் (தேனி),கடம்பூர் (தூத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமாரி) தலா 3 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை :


தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் அடுத்த நான்கு நான்களுக்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக மே 15 ஆம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் குமரிக்கடல் , லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated : May 13, 2021, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details