தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைக்காக கொள்முதல் செய்யப்பட்ட 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர், "ஐ.சி.எம்.ஆர் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பெற்றுள்ள 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசுக்கு எந்த ஒரு செலவினமும் ஏற்படவில்லை. இதுதவிர, மீதமுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.