வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு; ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!
சென்னை: வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வன்னியர் கல்வி அறக்கட்டளை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் சொத்துகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரது துணைவியார் பெயரில் மாற்றி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு வழக்கறிஞர் க.பாலு மூலமாக வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.