தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2019, 8:41 PM IST

ETV Bharat / state

9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் பெய்யப் போகும் பருவமழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேபோல் விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும்; ஈரோடு மாவட்டம் பகுதிகளில் கனத்த மழையும் பெய்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க:

சீனர்கள் தமிழர்களுக்குப் பங்காளி உறவுகள்!

ABOUT THE AUTHOR

...view details