தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2020, 1:58 PM IST

ETV Bharat / state

பதப்படுத்தப்பட்ட உணவு உடலிற்கு தீங்கு!

குளிர்பானம், ஜாம், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகளவு உட்கொள்ளுவதால் உடல்நலத்திற்கு பெரிதும் தீங்கு விளைக்கும் என்றும் இதனால் புற்றுநோய், இதய நோய் வருவதற்கு அதிக வாய்புள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவு உடலிற்கு தீங்கு!
பதப்படுத்தப்பட்ட உணவு உடலிற்கு தீங்கு!

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் அதன் தயாரிப்பு முறைகள் பற்றியும், அதனை உட்கொள்ளுவதன் மூலம் உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பதப்படுத்தப்படும் உணவை தயாரிக்கும்போது சுவையை அதிகரிக்க ஏதுவாக பலவிதமான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது.

உணவுப் பொருள்கள் பாக்கெட்டின் பின்புறத்தில் உள்ள லேபிளில் குறிப்பிட்டப்பட்டுள்ள நீளத்தைப் பார்ப்பதுதான் உணவு எவ்வளவு பதப்படுத்தப்பட்டது என்பதை தீர்மானிக்க எளிதான வழி. நீண்ட பட்டியல், அதிக பதப்படுத்தப்பட்டவை உள்ள உணவாகும் என்று ஹிரானந்தனி மருத்துவமனையின் ஆலோசகர் உட்சுரப்பியல் வல்லுநர் டாக்டர் தேஜல் லாதியா கூறியுள்ளார்.

சிறுவர்களை ஈர்க்கும் உணவு வகைகள்

இயற்கை சர்க்கரைகள் பழம், தானியங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகளுடன் காணப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளில் இந்த முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

அதிக அளவு ஆரோக்கியமற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .

ஆரோக்கியமற்ற உணவு

கூடுதல் கலோரிகள் - 'வெற்று' கலோரிகள் என அழைக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவின் மூலம் எடை அதிகரிப்பு, உயர் ரத்த சர்க்கரைக்கு வழிவகுக்கிறது. இது இதய நோய்கள், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும், பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து, புரதமும் இல்லை, பதப்படுத்தப்பட்ட உணவை ஒரே நேரத்தில் அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் போதுமான வைட்டமின்கள், தாதுக்கள் இல்லாமல் பாதிக்கப்படலாம்.

"பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்களுக்குத் தொடக்கப்பள்ளி காலத்திலேயே இடுப்பு சுற்றளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டவர்கள் சராசரியாக ஒரு மனிதன் இறப்பதற்கான விகிதம் 60 விழுக்காடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன" என்று டாக்டர் தேஜல் கூறியுள்ளார்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

இந்தியாவில், அதிக எடை, பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான பதப்படுத்தப்பட்ட உணவின் நுகர்வு அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு அதிகரிப்பதற்கும் கடுமையான கொள்கைகள் விதிக்க வேண்டும்.

அப்போதுதான் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், இறப்பு ஆகியவற்றின் எண்ணிக்கையை தடுக்க முடியும்.

ABOUT THE AUTHOR

...view details