தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 30, 2021, 8:02 PM IST

ETV Bharat / state

'தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை' மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்!

சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை (மே.1) முதல் பள்ளிக்கு வரத்தேவையில்லை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை
தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை

கரோனா தொற்றுப் பரவலால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மே மாத ஊரடங்கின் கட்டுபாடுகளும், தளர்வுகளும்!

ABOUT THE AUTHOR

...view details