தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 31, 2021, 5:22 PM IST

ETV Bharat / state

'கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதிப்பதால் யாருக்கும் பலனில்லை' - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதிப்பதால் யாருக்கும் பலனில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா
பிரேமலதா

சென்னையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், " கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். தாமதிப்பதால் யாருக்கும் பலனில்லை. இந்த நிமிடம் வரை அதிமுக வுடன் தான் இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது.

கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும். ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது.

தமிழ்நாட்டில், எந்தக் கட்சியும் கூட்டணி பற்றி முடிவு எடுக்கவில்லை, எனவே தேமுதிகவும் கூட்டணி பற்றி வரும் நாள்களில் தெளிவான முடிவு எடுக்கும். சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பினால், தேர்தலில் நான் போட்டியிடுவதை பற்றி கேப்டன் முடிவு செய்வார்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details