தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2019, 8:40 PM IST

ETV Bharat / state

'சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும்' - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சனிக்கிழமையும் தேர்தல் அலுவலகங்களில் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

nomination-forms-receiving-even-on-saturday
nomination-forms-receiving-even-on-saturday

ஊரக உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 09.12.19 முதல் பெறப்பட்டு வருகிறது.

வேட்பு மனுக்களைப் பெறுவதற்கான கடைசி நாளாக 16.12.19ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற 14.12.19ஆம் தேதி சனிக்கிழமை பொது விடுமுறை இல்லை என்பதால், அன்றும் வேட்பு மனுக்கள் பெறப்படும். எனவே தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர்கள் 14.12.19 அன்றும் வேட்பு மனுக்களை பெறுவதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கான பதவியிடங்களுக்கும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் திருடனை விரட்டிப் பிடித்த 'ரியல் சிங்கம்' - காவலருக்கு மக்கள் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details